4 ஆண்கள் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக பொய்யாக முறைப்பாடு செய்த யுவதிக்கு 12 மாத சிறை!!

246

girl

தன்னை 4 ஆண்கள் கூட்­டாக பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினர் என பொய்­யாக முறைப்­பாடு செய்த யுவதி ஒரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று 12 மாத சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. 25 வய­தான லெய்ஹா ஆர்ட்மென் எனும் யுவ­திக்கே இவ்­வாறு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தனது வீட்­டுக்கு அருகில் முக­வ­ரி­யொன்றை தேடி வந்த இனந்­தெ­ரி­யாத கறுப்­பின ஆண்கள் நால்வர் தன்னை கார் ஒன்றில் கடத்திச் சென்­ற­தா­கவும் பின்னர் தன்னைக் கட்­டி­வைத்­து­விட்டு, அவர்கள் நால்வரும் தன்னை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் தன்னை தாக்­கி­ய­தா­கவும் இவர் கூறினார்.

இரத்தம் தோய்ந்த நிலையில் தான் கட்­டி­வைக்­கப்­பட்­டி­ருப்­பதை வெளிப்­ப­டுத்தும் புகைப்படமொன்றையும் இவர் தனது காத­ல­ருக்கு அனுப்­பி­வைத்தார்.

தன்னை விடு­விப்­ப­தற்­காக கடத்தல் குழு­வினர் கோரும் கப்­பத்­தொ­கையை அவர்­க­ளிடம் கொடுக்குமாறும் தனது காத­ல­ரிடம் லெய்ஹா ஆர்ட்மென் கோரினார்.

இறு­தியில், கடத்தல் குழு­வினர் தன்னை வாக­னத்தில் ஏற்றி வந்து வீட்­டுக்கு அருகில் கைவிட்டுச் சென்ற­தா­கவும் அதன்பின் வைத்­தி­ய­சா­லைக்கு தான் சென்­ற­தா­கவும் அவர் கூறினார்.

இவ்­வி­டயம் தொடர்­பாக மிச்­சிகன் மாநி­லத்­தி­லுள்ள முஸ்­கேகன் கவுன்ரி பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

இது தொடர்­பாக பொலிஸார் விசா­ரணை நடத்­தினர். எனினும், இவ்­வா­றான ஒரு சம்­பவம் நடைபெறவில்லை என்­பது பொலி­ஸாரின் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­தது. தான் பொய் கூறி­ய­தாக லெய்ஹா ஆர்ட்மென் ஒப்­புக்­கொண்டார்.

அதை­ய­டுத்து பொய்­யான முறைப்­பாடு செய்­த­தாக குற்றம் சுமத்தி லெய்­ஹா­வுக்கு எதி­ராக வழக்குத் தொடுக்­கப்­பட்­டது.

இவ்­வ­ழக்கை விசா­ரித்த நீதி­பதி லெய்ஹா ஆர்ட்­மெ­னுக்கு 12 மாத சிறைத்­தண்­டனை விதித்­த­துடன் 1,158 டொலர் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன், லெய்ஹா இரு வருட காலம் நன்னடத்தை கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.