மணப்பெண்ணின் உறவினர்களால் மணமகன் படுகொலை : திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு நடந்த சோகம்!!

446

murder

தெலங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு மணப்பெண்ணின் உறவினரால் மணமகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான அனில் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இடையே சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது.

இவர்களின் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆனால் இவர்களின் இந்த முடிவுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மணமகனின் உறவினர்களின் துணையுடன் இருவரும் புறநகர் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணின் உறவினர்கள் திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு மணமகனை கத்தியால் தாக்கி சம்பவயிடத்திலேயே கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

மட்டுமின்றி மணமகனின் தந்தையையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் அவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இதனிடையே அந்த கும்பல் மணபெண்ணை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளது. இத்தகவல் அறிந்து வந்த பொலிஸார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.