சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் நேற்று (21.10.2016) காலை 11.30 மணியளவில் வவுனியா பொதுவைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
நேற்றுமுன்தினம் வவுனியா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் இரத்தம் பற்றாக்குறை என்று வெளியான தகவலை முன்னிட்டு சிறீரெலோ கட்சியின் செயளாளர் நாயகம் ப.உதயராசாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இளைஞர் அமைப்பினரின் அவசர ஒழுங்கமைப்பிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றதெனவும் இதில் பங்குபற்றிய இளைஞர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸதர்கள் அனைவருக்கும் சிறீரெலோ கட்சியின் செயளாளர் நாயகம் ப.உதயராசா மற்றும் இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் ப.கார்த்திக் ஆகியோர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.