துபாய் கடற்கரையில் நீராடிய பின் முதல் தடவையாக மேக் அப் இல்லாமல் மனைவியை பார்த்த கணவன் விவாகரத்து!!

304

beach

மத்திய கிழக்கு நாடொன்றைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை முதல் தடவையாக மேக் அப் இல்லாமல் பார்த்தவுடன் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

34 வயதான இந்நபர், 28 வயதான பெண்ணொருவரை அண்மையில் திருமணம் செய்தார். அதன்பின் இருவரும் துபாய்க்கு தேனிலவுக்குச் சென்றனர். அங்கு அல் மம்ஸார் கடற்கரையில் இருவரும் நீராடினர். அதன் பின்னர், மேக் இல்லாத தனது மனைவியின் முகத்தைப் பார்த்து மேற்படி நபர் அதிர்ச்சியடைந்தாராம்.

திருமணத்துக்கு முன்னர் அப்பெண் அதிக மேப் அப் மூலம் அழகான பெண்ணாக காட்சியளித்து தன்னை ஏமாற்றி விட்டதாக அந்நபர் கூறியதுடன் விவகாரத்தும் செய்துள்ளார் என உளவியல் மருத்துவரான டாக்டர் அப்துல் அஸீஸ் அசாப் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு முன்னர் தான் பிளாஸ்திக் அழகு சிகிச்சைகளை செய்து கொண்டதுடன், செயற்கை இமை, புருவங்களை அணிந்த தாகவும், டாக்டர் அப்துல் அஸீஸ் அசாப்பிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பற்றிய உண்மையை கணவரிடம் கூறுவதற்கு தான் முயற்சித்ததாகவும் ஆனால், அதற்கு மிக தாமதமாகிவிட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

இவர்களை மீண்டும் இணைப்பதற்கான எந்த முயற்சிக்கும் மேற்படி நபர் மறுத்து வருவதாக டாக்டர் அப்துல் அஸீஸ் அசாப் தெரிவித்துள்ளார்.