வவுனியாவில் போதைப்பொருளின் பாதிப்பு தொடர்பான செயலமர்வு!!

423

 
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புகுமுக மாணவர்களுக்கான போதைப்பொருளின் பாதிப்புகள் தொடர்பான செயலமர்வொன்று நேற்று (02.12.2016) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இந் நிகழ்வில் சுமார் 200 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக ஜனாதிபதி செயலணி அதிகாரிகள் , வளவாளர்கள் மற்றும் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந் நிகழ்வில் போதைப்பொருள் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பேராசிரியர் சிறிசேன, வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், உதவி அரசாங்க அதிபர் என்.கமலதாசன், யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1 03 3 04