மீராஜாஸ்மின் விவாகரத்து செய்ய முடிவு?

315


மலையாள நடிகைகள் பலருக்கு குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை. காவ்யா மாதவன், ஜோதிர்மயி, மஞ்சு வாரியர், ஊர்வசி, சரிதா, மம்தா உள்பட பலர் கணவரை பிரிந்துள்ளனர்.



தற்போது நடிகை மீரா ஜாஸ்மினும் இந்த பட்டியலில் சேர்கிறார். இவர் தமிழில் ரன், சண்டக்கோழி, ஆய்த எழுத்து, திருமகன், மம்பட்டியான் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

மீராஜாஸ்மினுக்கும் துபாயில் பொறியியலாளராக பணியாற்றிய அனில்ஜான் டைட்டஸ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு எதிர்ப்புகளுக்கு இடையில் திருமணம் நடந்தது.



அனில்ஜான் டைட்டசின் முதல் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் பாதுகாப்போடு இந்த திருமணம் முடிந்தது. ஆனாலும் திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.



திருமணத்துக்கு பிறகு மீராஜாஸ்மின் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் துபாயில் குடியேறினார். மகிழ்ச்சியாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசத்தொடங்கி உள்ளது. மீராஜாஸ்மின் கணவரை பிரிந்து திருவனந்தபுரம் வந்து விட்டார். ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.


தற்போது மலையாள படங்களில் மீராஜாஸ்மின் நடிக்க ஆரம்பித்துள்ளார். 10 கல்பனகள் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து பூமரம் என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். மீராஜாஸ்மின் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கணவரை வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் சம்மதிக்காததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் மலையாள பட உலகில் பேசப்படுகிறது.

கணவரை விவாகரத்து செய்ய வக்கீல்களுடன் அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. விவாகரத்து குறித்து இருவரும் இன்னும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. மீராஜாஸ்மின் திருமண முறிவு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.