இனிமேல் இந்தத் தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்!!

359


நம் வீட்டில் உள்ள முன்னோர்கள் சில பழக்க வழக்கங்களை செய்யக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் நாம் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் திரும்ப திரும்ப செய்து வருவோம், அது என்னவென்றால்,



அன்றாடம் ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யும் தவறுகள் என்ன?

நாம் உடுத்திய பழைய துணிகளை நமது வீட்டின் கதவுகளின் மீது போடக் கூடாது.



நமது உடம்பில் இருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கவே கூடாது அதை உடனே வெளியில் போட வேண்டும்.



ஒரே நேரத்தில், நம்முடைய இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.


திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது.

நாம் சாப்பிடும் போது, உணவை உருண்டையாக உருட்டி சாப்பிடக் கூடாது.


நாம் அதிகமாக ஈரமான ஆடையை உடுத்தக் கூடாது. அதிலும் ஈர துணியை உடுத்திக் கொண்டு உணவு சாப்பிடக் கூடாது.

ஆண்கள் ஷேவ் செய்து கொள்வதற்கும் சிறிது நேரத்திற்கு முன்பு எதுவும் சாப்பிடக் கூடாது.

தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமை அன்று ஷேவ் செய்துக் கொள்ள கூடாது.

நம்முடைய இரண்டு கன்னங்களிலும், கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ அல்லது உட்கார்ந்து இருப்பதோ கூடாது.


கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசி இலையை பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.

பெண்கள் புடவை உடுத்தும் போது, முந்தானையை தொங்க விட்டு நடக்கக் கூடாது.

கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது, நமது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்

கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.

சுமங்கலி பெண்கள் தலை குளிக்கும் பொழுது சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில், பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

பெண்கள் கோலம் போடும் போது தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டு போடக் கூடாது.

திருமணத்திற்கு பின் பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று மெட்டிகள் அணியக் கூடாது.

கர்ப்பமான இருக்கும் பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக் கூடாது.

திருமணத்திற்கு பின் பெண்கள் குங்குமம் வைக்கும் போது, கிழக்கு திசையை நோக்கி, இரண்டு புருவத்தின் மத்தியிலும் உச்சந்தலையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் அமாவாசை மற்றும் தவசம் ஆகிய நாட்களில் வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது.