உலகின் மிக ஆபத்தான விமான நிலையம்: உறைய வைக்கும் காட்சி!!

500

போர்த்துகலின் மெடீரா தீவின் விமான நிலையம் உலகின் மிக ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது.

கடல் மூலம் அங்கு வலுவான காற்று வெளிப்படுவதால் அப்பகுதியில் விமானத்தை இயக்குவது விமானிகளுக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 17ம் திகதி சுவிஸின் பிரபல விமான நிறுவனமான Edelweissஸின் A320 பயணிகள் விமானம் மெடீரா தீவுக்கு பயணித்துள்ளது.

மெடீரா தீவில் விமானத்தை தரையிறக்கும் நேரத்தில் காற்று வலுவாக வீசியுள்ளது. கிட்டதட்ட மூன்று முறை விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தும் தரையிறக்க முடியாமல் விமானி திணறியுள்ளார்.

இந்நிலையில், நான்காவது முயற்சியில் விமானி திறமையாக விமானத்தை தரையிறக்கியுள்ளார். தற்போது, குறித்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி உறைய வைத்துள்ளது.