காதல் பிரிவுக்கு முக்கிய காரணம் என்ன?

520

அறிவியல் ரீதியாக நமது உடம்பில் அண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளில் ஏற்படும் மாற்றமே ஒருவருக்கு காதல் உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

காதலில் ஏற்படும் பிரிவு, மனதளவில் இருவருக்கும் வலியை ஏற்படுத்தக் கூடியது.

தற்போதைய காலத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களை விட காதலிக்கும் போதே பிரிபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள்.

எனவே காதலில் ஏற்படும் பிரிவுகள் எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்.

காதலில் ஏற்படும் பிரிவிற்கு என்ன காரணம்?

காதலில் ஒருவர் ஏமாறுகிறார்கள் என்பதை விட, தங்களை ஏமாற்ற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றனர் என்பது தான் உண்மை. ஏனெனில் ஒருவர் காதலிக்கும் முன்பே ஒருவரை பற்றி நன்றாக புரிந்துக் கொண்டால் பிரிவு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

காதலிக்கும் சிலர் பிரிந்து விடலாம் என்ற வாய்ப்பு இருப்பதால் தான் பலர் இன்று காதலில் இணைகிறார்கள். எனவே காதலிக்கும் நபர்களை பற்றி நன்றாக புரிந்து தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

இன்றைய காலத்தில் காதலிக்கும் சில இளம் ஆண், பெண் இருவருமே அழகை விட தனது துணை ஃபேஷனாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அப்படி இல்லையெனில் ஃபேஷனாக இருக்கும் மற்றவர்களை தேடி செல்கின்றனர், இதனால் காதலில் பிரிவுகள் ஏற்படுகிறது.

காதலிப்பவர் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துக் கொள்ளாமல், பல விஷயங்களில் சந்தேக உணர்வுகள் மற்றும் ஈகோ பிரச்சனைகள் ஏற்படுவதால், காதலில் பிரிவுகள் ஏற்படுகிறது.

காதலிக்கும் போது, ஜாதி, ஜாதகம் போன்று பாராமல், திருமணம் என்ற பேச்சுவார்த்தை எழும் போது தடையாக இருக்கிறது என்று கூறுவதால், காதலில் பிரிவுகள் ஏற்படுகிறது.

காதலிக்கும் போது, எதுவும் சொல்லாமல், பின் தன்னுடைய இலட்சியம், குறிக்கோள் போன்றவற்றிற்கு காதல் தடையாக இருக்கிறது என்று கூறுவது தவறு. இதனால் தான் பல காதலில் பிரிவு நிலைகள் ஏற்படுகிறது.