கைத்தொலைபேசிகளுக்கான கழிவறை கடதாசி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ நகரிலுள்ள நரீட்டா சர்வதேச விமான நிலையத்தின் கழிவறைகளில் இந்த ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்பர் சுருள்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜப்பானிய டெலிகொம் நிறுவனமான என்.ரி.ரி. டெகோமோ எனும் இந்நிறுவனமே கைத்தொலைபேசிகளுக்கான நவீன கழிவறை கடதாசிகளை பொருத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன் ஸ்கிறீன்களில் அதிக கிருமிகள் பரவியிருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டதையடுத்து, மக்கள் தமது ஸ்மார்ட்போன்களை சுகாதாரமாக பாதுகாத்துக்கொள்வதற்காக ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்பர்களை தயாரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.
நரீட்டா சர்வதேச விமான நிலையத்தின் கழிவறைகளுக்கு எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்பர்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.