19 வய­தான இளை­ஞனை சூட்­கே­ஸுக்குள் ஒளித்து வைத்து கடத்த முயன்ற பெண் கைது!!

540


19 வய­தான இளைஞன் ஒரு­வனை சூட்கேஸ் ஒன்றுக்குள் ஒளித்து வைத்து, வட ஆபி­ரிக்­காவில் ஸ்பானிய ஆளு­கைக்­குட்­பட்ட பிராந்­தி­யத்­துக்குள் கடத்திச் செல்ல முற்­பட்ட குற்­றச்­சாட்டில் பெண் ஒரு­வரை ஸ்பானிய அதி­கா­ரிகள் கைது செய்­துள்­ளனர்.



மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி இச் ­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக அதி­கா­ரிகள் நேற்று தெரி­வித்­துள்­ளனர்.

ஆபி­ரிக்க கண்­டத்தின் வட பகு­தியில், மொரோக்­கோ­வுக்கு அருகில் செவ்ட்டா எனும் நகரம் உள்­ளது. 18.5 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவு கொண்ட இந்­ ந­கரம் ஸ்பானிய ஆட்­சிக்­குட்­பட்­ட­தாகும்.



இதனால், மொரோக்­கோ­வி­லி­ருந்து செவ்ட்­டா­வுக்குள் நுழை­வ­தற்கு பலர் முயற்­சிக்­கின்­றனர். இதைத் தடுப்­ப­தற்­காக செவ்ட்­டா­வுக்கும் மொரோக்­கோ­வுக்கும் இடையில் அதிக உய­ர­மான வேலிகள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.



இந்த வேலி­க­ளுக்கு மேலாக ஏறி செயுட்­டா­வுக்குள் நுழை­ப­வர்­களை தடுப்­ப­தற்கு ஸ்பானிய பொலிஸார் கடும் முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றனர். புத்­தாண்டுத் தின­மான கடந்த ஞாயி­றன்று அதி­காலை 4 மணி­ய­ளவில் சுமார் 1100 பேர் இவ்­வாறு மொரோக்­கோ­வி­லி­ருந்து செவ்ட்­டா­வுக்குள் நுழைய முயன்­ற­பொது ஸ்பானிய படை­யினர் அவர்­களை கலைக்க முற்­பட்­டனர்.


இதன்­போது, குடி­யேற்­ற­வா­சிகள் கற்­களை எறிந்­ததால் சுமார் 50 படை­யினர் காய­ம­டைந்­தனர் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இச் ­சம்­பவம் தொடர்­பாக 28 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இச்­ சம்­ப­வத்­துக்கு முன்­ன­தாக, சட்­ட­ரீ­தி­யாக செவ்ட்டா பிராந்­தி­யத்­துக்குள் சென்ற மொரோக்கோ பெண் ஒருவர், சூட்கேஸ் ஒன்­றுக்குள் 19 வய­தான இளை­ஞனை ஒளித்து வைத்து கடத்த முயன்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.


மேற்படி இளைஞன் ஆபிரிக்க நாடான கெபோனைச் சேர்ந்தவன் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மொரோக்கோ பெண்ணை ஸ்பானிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.