பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம் தனது மகளை கொடுத்து சகோத­ரியை ­மணந்து கொண்ட நபர்!!

397

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோ­த­ரியை நபரொருவர் இரண்­டா­வது திரு­மணம் செய்த சம்­ப­வ­மொன்று பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்­ளது.


இரண்டாவது மனைவியுடன் வசீர் அஹ­மது

பாகிஸ்­தானில் ஜம்பூர் எனும் ஊரில் வசிப்­பவர் வசீர் அஹ­மது(36). இவர் தன்­னு­டைய 13 வயது மக­ளை, தனது வீட்­டிற்கு அருகில் வசிக்கும் முஹ­மது ரம்­ஜா­ன் (36) என்­ப­வ­ருக்கு திரு­மணம் செய்து கொடுத்­துள்ளார்.


ஏதோ பண்­ட­மாற்றம் போல் அவர்கள் இரு­வரும், தங்கள் வீட்டு பெண்­களை மாற்றிக் கொண்ட விவ­காரம் பல­ரையும் அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது. இதில் முஹ­மது ரம்­ஜா­னுக்கு காது கேட்­காது மற்றும் வாய் பேச முடி­யாது. ஆனாலும், அவ­ருக்கு தன்­னு­டைய மகளை கொடுத்­துள்ளார் வசீம்.


இந்த விவ­காரம் பொலி­ஸா­ருக்கு தெரிய வரவே வசீர் மற்றும் ரம்­ஜானை அழைத்து சென்று விசா­ரணை செய்­த­தோடு, 16 வய­திற்­குட்­பட்ட பெண்ணை திரு­மணம் செய்­த­தற்­காக இரு­வ­ரையும் சிறையில் அடைத்­துள்­ளனர்.

ஆனால், அந்த பெண் தனக்கு 16 வயது ஆகி­விட்­டது என நீதி­மன்­றத்தில் நிரூ­பித்­த­தை­ய­டுத்து அவர்கள் இரு­வரும் விடு­தலை செய்­யப்­பட்­டனர். எங்கள் வீட்டுப் பெண்களை மாற்றிக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

முதல், இரண்டாவது மனைவிமார் மற்றும் பிள்ளைகளுடன் வசீர் அஹ­மது