நாயிடம் பால் குடிக்கும் சிறுவன் : வினோத வீடியோ!!

889


இந்தியாவில் சிறுவன் ஒருவன் கடந்த 6 ஆண்டுகளாக நாயிடம் பால் குடித்து வரும் வினோத சம்பவம் வீடியோவாக வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஜார்கண்ட மாநிலம் தன்பாத் நகரில் வசிக்கும் 10 வயது மோஹித் குமார் என்ற சிறுவனே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மோஹ்த்தின் தாய் கூறுகையில், மோஹித்திற்கு 4 வயது இருக்கும் போது தற்செயலாக நாயிடம் பால்குடித்தான். அதனைதொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாயிடம் பால் குடிக்க தொடங்கினான்.



ஒருமுறை பால் குடிக்கும் போது நாய் கடித்துவிட்டது. மருத்துவமனைக்கு சென்று நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சிகிச்சை அளித்தோம். நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவன் நாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை என கூறியுள்ளார்.



இதுகுறித்த மருத்துவர்கள் கூறியதாவது, நாய்ப்பால் மனித உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தது. ஆனால், நாய்க்கு ஏதேனும் நோய் இருந்தால் பால் மூலம் நோய் தொற்று ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.