புத்தாண்டு இரவு பாலியல் தொல்லைக்கு ஆளானேன் : பிரபல நடிகை!!

275

புத்தாண்டு இரவு பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பேஸ்புக் நேரலையில் நடிகை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நேரலையின் போது தவறாக கருத்து தெரிவித்த இளைஞருக்கு தக்க பதிலடி கொடுத்து பிரபலமான Shraavya Reddy இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக் நேரலையில் அவர் கூறியதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நண்பர்களுடன் கோவா சென்றிருந்தோம்.

புத்தாண்டு இரவு கடற்கரைக்கு சென்றுகொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் என்னை தவறாக தொட முயன்றான். முன்னதாகவே சுதாரித்துக்கொண்ட நான் அவன் கையை பிடித்து எச்சரித்தேன்.

ஆனால் அவன் தெரியாமல் நடந்துவிட்டதாக கூறி மன்னிப்புக்கேட்டான். புத்தாண்டு காரணமாக இச்சம்பவத்தை பெரிது படுத்தாமல் மன்னித்து விட்டேன்.

அருகிலிருந்த இளைஞனின் நண்பர்கள் சம்பவம் குறித்து என்னிடம் கேட்டறிந்து மன்னிப்பு கேட்டனர் என தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு இரவு பெங்களூரில் பெண்கள் பலர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுக் கூரதக்கது.