வவுனியாவில் 4.5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் பயனாளர்களுக்கு வழங்கல்!!

228

 
வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (08.01.2017) காலை 9 மணியளவில் மாவட்ட செயலகத்தில் திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன் தலைமையில் தேசிய நல்லினக்க ஒருமைப்பாட்டுக்குமான திட்டத்தினை அமுல்படுத்தும் முகமாக 4.5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் 181பயணாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

120 பயனாளிகளுக்கு 5லீட்டர் பால் கான் , 61 பயனாளிகளுக்கு 10லீட்டர் பால் கான், 20 பயணாளிகளுக்கு புல் வளர்ப்பிற்கான உபகரணங்கள், கால் நடை சங்கத்திற்கு பால் சேகரிப்புகான 1.37 மில்லியன் பெறுமதியான பட்டா ரக வாகனம் என்பனவற்றை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார , வடமாகாண சபை உறுப்பினர்களான ஜெயதிலக, G.T.லிங்கநாதன் , வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.