யாழில் வறுமையின் காரணமாக கீரைவிற்ற சிறுமிக்கு கிடைத்த அதிஸ்டம்!!

668


யாழ்.சாவகச்சேரி பொதுச் சந்தையில் வறுமை காரணமாக கீரை வியாபாரம் செய்த நிலையில் தாக்குதலுக்குள்ளான சிறுமிக்கு பல்கலைக்கழக கல்வி வரை உதவித்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் குறித்த உதவியை செய்ய முன்வந்துள்ளது.



அண்மையில் சாவகச்சேரி பொதுச் சந்தையில் கீரை வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுமி மீது சக பெண் வியாபாரி தாக்கிய சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சிறுமியின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவ சமூக அமைப்புக்கள் பல முன்வந்துள்ளன.



தாக்குதலுக்குள்ளான சிறுமிக்கும் அவரது சகோதரிக்கும் கற்றல் நடவடிக்கைகளுக்காக சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தினர் நிதிக் கொடுப்பனவுகளை மாதாந்தம் வழங்க முன் வந்துள்ளனர்.



மாதம் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் இவர்களின் பல்கலைக்கழக கல்வி வரை இக்கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த உதவித் தொகையை தென்மராட்சியில் உள்ள 36 மாணவர்கள் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது