வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்ட ஆரம்பவிழா!!

370


 
வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த ஆரம்பவிழா இன்று(09.01.2017) வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சரும் பதில் முதலமைச்சருமான பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



நிகழ்வில் உலக உணவுத்திட்டத்தின் ஆசிய பசுபிக்பிராந்தியத்தின் இயக்குநர் டேவிட் கற்குட், உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரண்டா பேட்டன் ஆகியோருக்கு நினைவுப்பரிசில்கள் பாடசாலை மாணவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்குமாகாணவிவசாய அமைச்சு பிரதி பிரதம செயலாளர் திருமதி. சரஸ்வதி மோகநாதன், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் க.ராதாகிருஸ்ணன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.