வவுனியாவில் பல்துறை வெற்றியாளர்கள் கெளரவிப்பு!!

1106

 
வவுனியாவில் கணனி மற்றும் ஆங்கில கற்கை நெறிகளை 15 வருடங்களாக வவுனியாவில் வழங்கி வரும் தனியார் கல்வி நிறுவனமாகிய Elite Computing and Business College – ECBC வவுனியாவின் 2015ம் ஆண்டிற்கான வெற்றியாளர்கள் என்ற அடிப்படையில் கடந்த ஞாயிறு(08.01.2017) அன்று வவுனியாவில் விருது வழங்கும் வைபவம் ஒன்றினை நடாத்தியது. இந் நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்வர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன், கௌரவ விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சிற்றம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்..
அரசியல் துறையில் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்
எழுத்துத் துறையில் கலாநிதி அகளங்கன்
சொற்பொழிவுத் துறையில் தமிழருவி த.சிவகுமாரன்,
கல்வி நிர்வாகத் துறையில் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் (விபுலானந்தா கல்லூரி),
விளையாட்டுத் துறையில் எ.அன்ரனி ரெக்ஸ்சன்
ஊடகத்துறையில் பீ.கார்த்தீபன்
கிராம சேவையாளர்களில் அனுரோசி (ஓமந்தை)
இசைத்துறையில் கந்தப்பு ஜெயந்தன்
சமூக சேவையில் எஸ்.சந்திரகுமார்
குறும்படத் துறையில் அ.மிதுனா
நடனத் துறையில் நா.செந்தூர்ச்செல்வன்
நாடகத் துறையில் எஸ்.துஜான்
பாடலாசிரியர் த.பிரதாபன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.