வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (10.01.2017) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா தாண்டிக்குளம் இராணுவத்தினரின் உணவகத்திற்கு அருகில் இன்று காலை யாழ் வீதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிலில் பயணித்த ம.சயந்தன் என்ற 26வயது இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கில் கட்டுப்பாட்டினை இழந்து வீதியின் மறுபக்கம் புற்தரையினுள் சென்று விபத்துக் குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் வீதியில் போக்குவரத்து கடமையில் நின்றிருந்த போக்குவரத்துப் பொலிசார், பொதுமக்களின் உதவியுடன் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.