வவுனியா செட்டிகுளம் அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சொரூபம் விசமிகளால் சேதம்!!

279

வவுனியா, செட்டிகுளம் அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சொரூபம் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தின் முன்றலில் இருந்த மாதா சொரூபம் நேற்று மாலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக அவ்வாலயத்தின் குரு ஜெயபாலன் குரூஸ் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்தை சென்று பார்வையிட்ட செட்டிகுளம் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.