வவுனியா விபுலாந்தா கல்லூரியில் 67மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு!!

505


அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியிலிருந்து 67மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரியின் அதிபர் சு.அமிர்தலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,



கலைப்பிரிவில் மனோகரன் அபிராமி 2AB சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 19வது இடத்தினையும் லோஜிதா சர்வேஸ்வரன் 2AC சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 33வது இடத்தினையும் ஞானமுத்து அபிறாஜிதன் ABC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 44வது இடத்தினையும் நாகரெட்ணம் அஜித்குமார் 2AC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 45வது இடத்தினையும்,

கணிதப்பிரிவில் சிவஞ்ஞானசுந்தரம் கிரிசாந்தன் ABC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும் தவனேந்திரன் றேனுஜன் B2C சித்தியினைப் பெற்று 23வது இடத்தினையும் நாகானந்தக்குமாரன் அஜித்குமார் 2BC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 13வது இடத்தினையும்,



விஞ்ஞானப் பிரிவில் சிவனேசன் கோபிதன் A2B சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 19வது இடத்தினையும் தர்மராஜா நிதுசன் A2B சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 22வது இடத்தினையும் முருகானந்தம் விதுஷன் 2BC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 33வது இடத்தினையும்,



வர்த்தகப்பிரிவில் முருகானந்தம் லிதீபன் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 7வது இடத்தினையும் விஜயரட்ணம் கிரிஸ்யான்றாமி 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் மாவட்ட ரீதியில் 16வது இடத்தினையும், இக்றேசியல் டோனியல் பிறவின்ரன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 21வது இடத்தினையும் கனநாதன் கலைச்செல்வன் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில்19வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.


கணிதப்பிரிவில் 08மாணவர்களும், உயிரியல் பிரிவில் 07மாணவர்களும், கணிதப்பிரிவில் 24 மாணவர்களும் வர்த்தகப்பிரிவில் 28மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கான தகுதியினை பெற்றுள்ளனர்.

அது மட்டுமல்லாது கடந்த வருடத்தினை விட இவ் வருடம் எமது மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.