‘ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்’ : இணையத்தில் ஊடுருவி தகவல்களைத் திருடிய நபர் கைது!!

285


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக செயற்படுத்தபப்ட்டு வந்த ‘ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” (ஜனபதிட கியன்ன) என்ற இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலிருந்து தகவல்களை பெற்று அதனை ஊடகவியலாளரொருவருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



அத்­துடன் சந்­தேக நப­ரி­ட­மி­ருந்த கணினி துணைச்­சா­த­னங்கள், தக­வல்கள் என்­ப­வற்­றையும் இரகசிய பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

அஹங்­கம, கத­லுவ பிர­தே­சத்தை சேர்ந்த இளை­ஞரே இவ்­வாறு குறித்த இணை­யத்­த­ளத்­தினுள் பிர­வே­சித்­துள்ளார். இந்த இணை­யத்­த­ள­ம் மக்­களின் நேரடி முறைப்­பா­டு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்­ளது.



ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பொது­மக்­க­ளினால் அனுப்­பப்­படும் பிரே­ர­ணைகள், மனுக்கள், தனிப்­பட்ட குரல்­ப­தி­வுகள் மற்றும் கடி­தங்கள் போன்ற இலட்­சக்­க­ணக்­கான தகவல் கோப்புகள் குறித்த இணை­யத்­த­ளத்­தி­லி­ருந்து சந்­தேக நப­ரினால் திரு­டப்­பட்­டுள்­ளது.



இச்­சந்­தே­க­ந­ப­ரினால் கள­வா­டப்­பட்ட இந்த கோப்­புகள் ஊட­க­வி­ய­லா­ள­ரொ­ரு­வ­ருக்கு மின்­னஞ்சல் மூலம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.


இந்த தக­வல்கள் காண­மல்­போ­யுள்­ளமை குறித்து ஜனா­தி­பதி செய­லகம் கடந்த 7ஆம் திகதி இர­க­சிய பொலி­ஸா­ருக்கு அறி­வித்­தி­ருந்த நிலையில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்த பொலிஸார் இந்த தக­வல்கள் தனிப்­பட்ட நப­ரொ­ரு­வரின் மின்­னஞ்சல் முக­வ­ரி­யி­லி­ருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்தது.

அம்­மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு குறித்த தக­வல்­களை அனுப்­பி­யி­ருந்த மின்­னஞ்சல் முக­வ­ரியை இனங்கண்­டுள்­ளனர்.


இந்த மின்­னஞ்சல் முக­வ­ரிக்­கு­ரிய அஹங்­கம, கத­லுவ பிர­தே­சத்தை சேர்ந்த சந்­தேக நப­ரான இளைஞரை கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய போது அவர் குற்றச்சாட்­டு­களை ஒப்புக்கொண்­டுள்ளார்.

இந்­நி­லையில் சந்­தே­க­நபர் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் நேற்­று­முன்­தினம் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட வேளையில் எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை அவரை விளக்க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கொழும்பு பிர­தம நீதிவான் லால்­பண்­டார உத்­த­ர­விட்டார்.

ஜனா­தி­பதியின் உத­விச்­செ­ய­லாளர் சமீர கன்­னங்­கர பொலி­ஸா­ருக்கு அளித்த முறைப்­பாட்­டுக்­க­மைய இர­க­சிய பொலிஸ் விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் என்.கே.சேனா­ரத்ன இது தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

இது தொடர்பில் சந்­தேக நப­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளின்­போது, தான் எவ்­வித சிர­ம­மு­மின்றி குறித்த இணை­யத்­த­ளத்­தினுள் ஊடு­ரு­வி­ய­தா­கவும், அந்த இணை­யத்­த­ளத்­தினுள் காணப்­படும் பொது­மக்­களின் மனுக்­க­ளுக்கு தகுந்த நட­வ­டிக்கை எடுக்­காமை குறித்து தெரி­யப்­ப­டுத்­தவே தான் இவ்­வாறு செய்­த­தாகவும் தெரி­வித்­துள்ளார்.


இவ்­வாறு திரு­டப்­பட்ட தக­வல்கள் இலத்­தி­ர­னியல் ஊடக நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரியும் ஒரு­வ­ரது உத்­தி­யோ­க­பூர்வ மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளமை குறித்து விசா­ரணைகள் இடம்பெறுகின்­றன.

இதே­வேளை, அண்­மையில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்­தி­னுள் ஊடுருவி, உயர்த­ரப்­ப­ரீட்­சை­யினை ஒத்­தி­வைக்­கு­மாறு அதி­லுள்ள தர­வு­களை மாற்றி மிரட்டல் விடுத்­தி­ருந்த பாடசாலை மாண­வ­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்டு பின்னர் ஜனா­தி­ப­தி­யினால் விடு­தலை செய்யப்பட்டார்.

இவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்ட மாண­வ­னுக்கு அதன்பின்னர் ஜனா­தி­பதி ஐபோன் ஒன்­றி­னையும் பெறு­ம­தி­யான பரிசுகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.