இறந்தவர்களின் எலும்பில் சூப் வைத்து குடிக்கும் யானோமமி இனத்தவர்கள்!!

325


இறந்தவர்களுக்காக வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான சடங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் யானோமமி இன மக்கள் இறந்தவர்களின் சடலத்தை சூப் வைத்து குடிக்கின்றனர்.



யாரேனும் இறந்துவிட்டால் அவர்களைப் புதைப்பது அல்லது எரிப்பது ஆகிய இரண்டு முறைகள் தான் உலகளவில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

அப்படி எரிக்கப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை இந்து மதத்தினர் ஆன்மீக அடிப்படையில் சில சடங்குகள் செய்து கடலில் கரைத்துவிடுவார்கள்.



ஆனால் பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் யானோமமி இன மக்களின் சடங்கு முறைகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.



இவர்கள் தங்களது இன மக்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடலை எரித்து, சாம்பல் மற்றும் எலும்பினை எடுத்து காய்கறிகள் போட்டு சூப் வைத்து குடிக்கிறார்கள். மேலும் தங்களுடைய இனத்தையே சாப்பிடுவதை பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.


மரணம் என்ற ஒன்று நிகழக்கூடாது, அப்படி நிகழ்ந்தாலும் அவர்கள் தம்முடன் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என யானோமமி இனத்தவர்கள் நம்புகின்றனர்.

இறந்தவர்களின் சாம்பல் மற்றும் எலும்பில் சூப் வைத்துக் குடிப்பதால் அவர்கள் தம்முடனேயே வாழ்கிறார்கள் என்பது இம்மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.