வவுனியா செட்டிகுளம் பிரதேச பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் குமாரசாமி முன்பள்ளி புனரமைப்பு!!

353

 
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடாவடிக்கை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் செட்டிகுளம் பிரதேச பிரிவிற்குட்பட்ட நேரியகுளம் இளைஞர் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு வேலை நிறைவு பெற்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இதனை முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் கழகத்தின் தலைவரும் ஆகிய சங்கரன் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு இளைஞர் சேவை அதிகாரி இ.சசிகரன், மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் கா.கிரிதரன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.