வவுனியாவில் இரு வேறு இடங்களில் அடிக்கல்நாட்டும் நிகழ்வு!!

495


 
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரு பகுதிகளில் வீடமைப்பு அதிகார சபையின் அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமத்திற்கு கிராமம் – வீட்டிற்கு வீடு செமட்ட செவண மாதிரிக்கிராம வேலைத்திட்டம் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியா செட்டிகுளம், பெரியகுளம் பகுதியில் மீள் குடியேற்றப்பட்டு வீடுகளின்றி வசித்துவரும் 87குடும்பங்களுக்கும், பாவற்குளம் 6ம் யூனிட்டில் வசித்துவரும் 16 குடும்பங்களுக்கும் என இருவேறு இடங்களில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.



ஐந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுவரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டத்தில் ஆரம்ப நிகழ்வு இன்று (11.01.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் திருமதி குறுஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், ஜக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம், பி.எம்.மகீர், செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர் திரு.முகுந்தன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அபிவிருத்திச்சங்கம், பயனாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.