வவுனியாவில் இளைஞன் கொடூரமாக அடித்துக்கொலை!!

929


 
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்து வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்ற 25 வயது இளைஞனே இவ்வாறு கொடூரமாக தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இவர் குடியிருந்த வீட்டிற்கு முன்பாக இருந்த மற்றுமொரு இல்லத்தில் வைத்தே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



குறித்த இளைஞனின் பெற்றோர் சுவிஸ்லாந்தில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி நைனாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.