டுவிட்டரில் இருந்து வெளியேறினார் திரிஷா!!

305


ஜல்லிக்கட்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை திரிஷா டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.



பீட்டாவுக்கு ஆதரவாக இருந்த திரிஷா-வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, மீம்ஸ்கள், போஸ்டர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வசைபாட ஆரம்பித்தனர்.

ஆனால் தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை என திரிஷா குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அவரது டுவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவே மீண்டும் பிரச்சனை வெடித்தது.



இந்நிலையில் டுவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்துள்ளார்.



இந்த முடிவு தற்காலிகமானது தான் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.