ஒலிம்பிக் நாயகன் இவ்வளவு ரூபாயா வரதட்சணையாக வாங்கினார்?

368

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், தனது திருமணத்திற்கு ஒரு ரூபாய் மட்டுமே வரதட்சணையாக வாங்கியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில் யோகேஷ்வர் தத்துக்கும், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஜெய்பகவான் சிங்கின் மகள் ஷீடல் சர்மாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்காக மணப்பெண் வீட்டிலிருந்து வெறும் ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக யோகேஷ்வர் பெற்றுள்ளார்.

இது குறித்து யோகேஷ்வர் கூறுகையில், எனக்கு இரண்டு சகோதரிகள் உள்ளார்கள். அவர்களது திருமணத்திற்காக பெற்றோர்கள் சிரமப்பட்டு வரதட்சணை அளித்தனர்.

இதனால் தனது திருமணத்திற்கு பெண் வீட்டார் சிரமப்படக்கூடாது என இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இளம் வயதிலே மல்யுத்தத்தில் சாதிப்பது மற்றும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்வது என இரண்டு முடிவுகள் எடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.