வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!!

445

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(16.01.2017) காலை 9.30 மணியளவில் ஆரம்பப் பாடசாலையிலிருந்து பிரதி அதிபர் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்டு ஐயாத்துரை மண்டபத்தில் நிகழ்வுகள் தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி. நட்ராஜ், சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர் ஆரம்பப்பிரிவு செ.விஜயகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் வரவேற்று நிகழ்வுகளுடன் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. தரம் ஒன்றிற்கு அனுமதிபெற்ற மாணவர்களை தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் பூச்செண்டு, பலூன்கள் கொடுத்து அழைத்துச் சென்றனர்.

இன் நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.