வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்துள்ள காணி அரசாங்க அதிபரிடம் கையளிப்பு!!

271

 
வவுனியா – ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுவத்தினரால் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டது.

ஓமந்தை சோதனைச்சாவடியில் இராணுவத்தின் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களை இராணுவத்தினர் அகற்றிய நிலையிலே இன்று குறித்த காணி வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

யுத்தம் நிறைவடைந்தன் பின்னர், குறித்த காணியின் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக தமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதனையடுத்து, தமது தேவைக்காக அமைத்திருந்த கட்டிடங்கள் மற்றும் தளபாடங்களை இராணுவத்தினர் அகற்றிய நிலையில், இன்று 22 ஏக்கர் காணியை இராணுவத்தினர் வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

இதேவேளை, மிகுதியாகவுள்ள 2 ஏக்கர் காணி இராணுவத்தின் வசமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் ஆட்சி ஏற்பட்ட போது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், இராணுவம் அப்பகுதியில் நிலைகொண்டிருந்தது.

காணி கையளிக்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் கா. உதயராசா, அப்பகுதி கிராம அலுவலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.