வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கான சேவை ஆரம்பம்!!

870

 
வவுனியா யாழ் வீதியில் நேற்று முன்தினம் (16.01.2017) மத்திய போக்குவரத்து அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தில் செயற்பாடுகள் இன்று நடைபெறுகின்றது.

நேற்று வவுனியா பேரூந்து நிலையத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டதுடன் இன்றிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்வதற்கு அரச மற்றும் தனியார் பேரூந்துகள் முடிவு எடுக்கப்பட்டதுடன் இன்று முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை முதல் தனியார் மற்றும் அரச பேரூந்துகள் இணைந்த நேர அட்டவணையில் ஒருவாரத்திற்கு சேவை மேற்கொள்வதற்கும் இணங்கி செயற்பட்டு வருகின்றனர்.

பழைய பேரூந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் உள்ளுர்களுக்கான சேவைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.