தடுமாறும் சூர்யா!!

242

சூர்யா நடித்த சிங்கம் 3 படம் ஜனவரி 26ம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சூர்யா இந்த படத்தை ஏற்கனவே திட்டமிட்டப்படி வெளியிடாமல் தள்ளிவைத்ததற்கு காரணம் ஒரே திகதியில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடவேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால் தற்போது அதுவும் நடக்காது போலிருக்கிறது. காரணம் என்னவெனில் பொங்கலுக்கு வெளியான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவின் படங்கள் திரையிட்ட இடமெல்லாம் நல்ல வசூலுடன் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் பட மாளிகை அதிபர்கள் தங்கள் படமாளிகையை சூர்யாவின் படமான சிங்கம் 3 க்கு கொடுப்பதற்கு யோசித்து வருகின்றனர்.

சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் தெலுங்குவெளியிட்டிற்கு பொறுபேற்றிருக்கும் முன்னணி தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் மற்றும் தில் ராஜு ஆகியோர் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பதில் இருக்கிறார்களாம். படத்தை ஒத்திவைக்க சூர்யா தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சூர்யாவும் படக்குழுவினரும் தடுமாறி வருகின்றனர். பெரிய பட்ஜட் படமென்றால் இது எல்லாம் சகஜம்தானோ என்னவோ..!