யாழ். மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 291 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!!

211

நாடளாவிய ரீதியில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள இரண்டாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 291 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுவில், சாவகச்சேரி மற்றும் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கனகராஜா நந்தகுமாரன் குறிப்பிட்டார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சாலால் யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.