சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்திய சர்ச்சைக்குரிய பேஸ்புக் பக்கம் முடக்கம்!!

593

சிறிய பெண் பிள்ளைகளின் புகைப்படத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பேஸ்புக் பக்கத்தை முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கணனி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பேஸ்புக் பக்கம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அந்த பக்கத்தை அதிகமாக பார்வையிட வேண்டும் என்பதற்காக, அதன் உரிமையாளர் பாலியல் கவர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறுமிகளின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென கணனி அவசர பிரிவின் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் விரும்பியதனை போன்று புகைப்படம் பதிவிடுவதற்கும், அவ்வாறான பக்கங்களை தயாரித்து நடத்தி செல்வதற்கும் உள்ள சுதந்திரம் காரணமாக இவ்வாறான பிரச்சினை ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கள் புகைப்படங்களை நண்பர்கள் மாத்திரம் பார்க்கும் வகையில் உள்ள பேஸ்புக் பாதுகாப்பு முறையை பயன்படுத்துவதன் ஊடாக இவ்வாறு புகைப்படம் திருடப்படுவதனை தடுக்க முடியும் எனவும், புகைப்படங்களை வேறு செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்படுவதனை தடுத்துக் கொள்ள முடியும் என அந்த பிரிவு நினைவுப்படுத்தியுள்ளது.