10 ரூபாய் பிரச்சனையால் தீயில் எரிந்த இளம்பெண்!!

308

புனே நகரில் 10 ரூபாய் நோட்டால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை குடும்பத்தை சேர்ந்த சுந்தரம்மா(30), தனது மகன் ராகுலிடம் மளிகை கடைக்கு சென்று பொருள் ஒன்றை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

ராகுல் கடைக்கு சென்றுகொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரின் 12 வயது மகள், ராகுலிடம் சண்டையிட்டு, 10 ரூபாயை கசக்கி எறிந்துள்ளாள். தனது பணத்தினை திருப்பி தருமாறு ராகுல் கேட்டும் அவள் மறுத்துள்ளான்.

இதனையடுத்து வீடு திரும்பிய ராகுல், நடந்தவற்றை தனது தாயிடம் தெரிவித்துள்ளான். இதனைகேட்க சென்ற சுந்தரம்மாவை, அச்சிறுமியின் பெற்றோர் தரக்குறைவான முறையில் அவமானப்படுத்தியுள்ளனர்.

மேலும், இது சம்பந்தமாக நீ எதாவது பிரச்சனை செய்தால் உன்னை கொலை செய்துவிடுவோம் என எச்சரிக்கை வேறு விடுத்தனர்.

இதனால் மனமுடைந்த சுந்தரம்மாள், வீட்டுக்கு திரும்பியவுடன் தனது உடலில் தீவைத்து எரித்துக்கொண்டார். இதில் சுந்தரம்மாளின் உடல் அதிகமாக எரிந்துவிட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது, 12 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.