வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்பாக சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!!

437


 
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (18.01.2017) காலை 10 மணியளவில் பொஹஸ்வெவ பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் ஒன்றிணை ந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

தமது பகுதியில் நான்கு பிரதேச செயலாளர்களிடம் சேவைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளதால் அக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு தெரிவித்து சல்லிகம, சலனிமுகுமு , நாமவகம, நந்திமித்திரகம, போகாஸ்வெவ பிரிவு ஒன்று மற்றும் இரண்டு போன்ற பகுதி பொதுமக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமது பகுதிக்கான பிரதேச செயலகத்தினை ஒன்றிணைத்து ஒரு செயலகத்தில் சேவைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.