தினமும் 36 முட்­டைகள், 3 கிலோ இறைச்சி, 5 லீற்றர் பால் உட்கொள்ளும் பாகிஸ்­தானின் மிகப் பல­சாலி மனிதர்!!

390


 
பாகிஸ்­தானைச் சேர்ந்த இளை­ஞ­ரான அர்பாப் கிசெர் ஹையாத், பாகிஸ்­தானின் மிக பல­சாலி மனிதர் என வர்­ணிக்­கப்­ப­டு­கிறார். 25 வய­தே­யான ஹையாத்தின் தற்­போ­தைய எடை 435 கிலோ­கிராம். பாகிஸ்­தானின் மர்தான் நகரைச் சேர்ந்­தவர் இவர்.

வெறு­மனே உடற் பரு­மனில் மாத்­திரம் வித்­தி­யா­ச­மா­ன­வ­ராக அர்பாப் கிசெர் ஹையாத் இருக்­க­வில்லை. பளு­தூக்கும் போட்­டியில் சாதனை படைக்க வேண்டும் என்­பதில் ஆர்வம் கொண்ட இவர், அண்­மையில் நகரும் உழவு இயந்­திரம் (ட்ரெக்டர் ) ஒன்றை கயிறு கட்டி தனது கரங்­களால் இழுத்து நிறுத்தி தனது பலத்தை வெளிப்­ப­டுத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.



பிர­மாண்ட உடல் தோற்றம் கொண்ட ‘ஹல்க்’ எனும் கொமிக்ஸ் பாத்­திரம் உலகப் பிர­சித்தி பெற்­றது. அது ஒரு கற்­பனைப் பாத்­திரம். இந்­நி­லையில், உலகில் உயிர்­வாழும் நிஜ­மான ஹல்க் என அர்பாப் கிசெர் ஹையாத் புக­ழப்­ப­டு­கிறார்.

‘பளு தூக்­கு­தலில் சம்­பி­ய­னாக வேண்டும் என்­பதே எனது இலக்கு. இந்த உடலைத் தந்த இறை­வ­னுக்கு நன்றி தெரி­விக்­கிறேன்’ என அவர் தெரி­வித்­துள்ளார்.



இந்த உட­லால் எனக்கு எந்­த­வொரு உடல் நலக்­கோ­ளாறோ அல்­லது, உடல் எடை­யினால் அசௌ­க­ரி­யமோ ஏற்­ப­ட­வில்லை எனவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.



6 அடி 3 அங்­குல உய­ர­மான அர்பாப் கிசெர் ஹையாத் 2012 ஆம் ஆண்டு ஜப்­பானில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் 5000 கிலோ­கிராம் எடையைத் தூக்­கி­ய­தாகக் கூறு­கிறார்.


தனது பிர­மாண்ட உடல் தோற்­றத்­துக்­காக விசேட உண­வு ­மு­றையை அவர் கடை­ப்பி­டிக்­கிறார்.

தினமும் 10,000 கிலோ உணவு அவ­ருக்குத் தேவைப்­ப­டு­கி­றதாம். இதற்­காக 36 முட்­டைகள், 3 கிலோ இறைச்சி, மற்றும் 5 லீற்றர் பால் ஆகி­ய­வற்றை அவர் உட்­கொள்­கிறார்.


கலோரி அதி­க­மான உண­வு­க­ளையே அவர் உட்­கொள்­கிறார். உலகின் மிகப் பல­சாலி மனி­த­ராக வேண்டும் என விரும்பும் அர்பாப் கிசெர் ஹையாத், அமெரிக்காவின் டபிள்யூ. டபிள்யூ.ஈ. (WWE) மல்யுத்தப் போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.