மத்­தி­ய­த­­ரைக்­கடல் பகு­தியில் அக­திகள் படகு விபத்­து : 180 பேர் உயி­ரி­ழப்­பு!!

250

லிபியா அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 180 பேர் உயிரிழந்துள்­ளனர்.

இது குறித்து சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு, ஐ.நா. அகதிகள் நல ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் தெரிவித்ததாவது, கிழக்கு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்டோர், ஐரோப்பிய நாடுளில் அடைக்கலம் தேடி லிபியாவிலிருந்து படகு மூலம் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டனர்.

புறப்பட்ட 5 மணி நேரத்தில், அந்த அகதிகள் படகின் இயந்­திரம் பழு­­த­டைந்­துள்­ளது. அதையடுத்து, இரு தளங்களைக் கொண்ட அந்தப் படகு கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கியது.

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேரை மட்டுமே பிரான்ஸ் மீட்புப் படகால் உயிருடன் மீட்க முடிந்தது. மேலும், விபத்தில் உயிரிழந்த 4 பேரது உடல்களும் மீட்கப்பட்டன.

விபத்தில் உயிர் பிழைத்தவர்களிடம் நடத்திய விசாரணையில், படகுடன் கடலுக்குள் மூழ்கி சுமார் 180 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. உயிர் பிழைத்தவர்களில் இருவர் எரித்ரேயாவையும், இருவர் எத்தியோப்பா வையும் சேர்ந்தவர்கள் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்­ள­னர்.