நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்?

287

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சிக்கிய சின்னாபின்னமான த்ரிஷாவுக்கு தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை ஆதரித்ததால் நடிகை த்ரிஷாவுக்கு எதிராக பலர் செயல்பட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பிடிவாரண்ட் அவரது தாய் உமா கிருஷ்ணனுக்கு தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு தனது மகள் த்ரிஷாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாக அவரது அம்மா உமா பத்திரிகை ஒன்று மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை த்ரிஷா சமீபத்தில் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது உமா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என சென்னை நீதிமன்றம் உமா கிருஷ்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்த தகவல் தான் நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தவறாக பரவி வருகிறது.