ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை கொச்சைப்படுத்திய கிருஷ்ணசாமி!!

288

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறு குழந்தைகள் என அனைவரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டம் தமிழகத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தமிழக முதல்வரான பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முதல்வரின் உறுதியான தீர்ப்புக்கு பின்னரே அடுத்த கட்ட நிலைமை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி ஜல்லிக்கட்டு விவாகாரம் குறித்து போராடும் இளைஞர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில் அவர் பொங்கல் தினத்தன்று மாடுகளை துன்புறுத்த வேண்டாம் என்பதற்காகத்தான் அன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.

ஆனால் நீங்கள் அன்றைய தினம் மாட்டை கொடுமை செய்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல் இருக்க வேண்டும் என்றால் தாம் 50 வருடம் பின்னர் தான் செல்ல வேண்டும் எனவும், போராடும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் இனிமேல் வாகனங்களில் செல்லக்கூடாது, காளைகளை பயன்படுத்திதான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழக மக்களை அவர் இழிவுபடுத்துவது போல் அந்த வீடியோவில் பேசியுள்ளது, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி போராடும் தமிழர்களுக்கு பெரும் ஆத்திரத்தை மூட்டியுள்ளதாக அந்த வீடியோவை பார்ப்பவர்கள் தங்கள் கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.