உண்மையான செய்தியாளர்கள் யார்? சொல்கிறார் ஜனாதிபதி

410

நிலைபேறான அபிவிருத்திச் சமுகத்தின் பொறுப்புக்களையும், கடமைகளையும் நிறைவேற்றும் போது பாடசாலை மாணவர்கள் உண்மையான செய்தியாளர்களாக திகழ்கிறார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.திகன ஹெங்கல்ல மகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிலைபேறான அபிவிருத்தி பாடசாலை சங்கங்களை அமைக்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நிலைபேறான பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் வழிகாட்டல் கோவையை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் ஜனாதிபதி இதன்போது கையளித்துள்ளார்.இந்தத் திட்டம் தொடர்பான இணையத்தளம் ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.