2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டவர்களினால் இலங்கையில் ஏற்பட போகும் மாற்றம்..!

333


சமீப காலமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வரும் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 2 லட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜீன் மெரின் சூ இந்த தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு 20 ஆயிரம் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைத்தரும் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.