19 வயது இளைஞனை கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க மிக்சிக்கன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
சகினாவ் பிராந்தியத்தைச் சேர்ந்த லெஸ்ரினா மேரி ஸ்மித் என்ற மேற்படி பெண், தனியாக சென்று கொண்டிருந்த குறிப்பிட்ட 19 வயது இளைஞனை கத்தி முனையில் தடுத்து நிறுத்தி அவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் ஆயுள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.