18 ஆவது வயதில் காணாமல் போன பெண் 43 வயதில் வீடு திரும்பினர்!!

209

தனது 18 ஆவது வயதில் காணாமல் போன­தாக கூறப்­படும் பெண் ஒருவர், கொழும்­பி­லுள்ள வீடு ஒன்றில் அடி­மை­யாக பணி­யாற்றி வந்தநிலையில் சுமார் 25 வரு­டங்­களின் பின்னர் தனது வீட்டை தேடி­வந்த சம்­ப­வ­மொன்று கம்­பளை, கிரா­வுல்ல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இப்­ பெண்­ணுக்கு தற்­போது 43 வய­தா­கின்ற நிலையில், இவர் காணாமல் போன­தை­ய­டுத்து, அவரின் குடும்­பத்­தி­ன­ருக்கு வழங்கும் நட்­ட­ஈட்டு பணத்­தை யும் கங்­க­இ­ஹ­ல­கோ­ரள பிர­தேச செய­ல­கத்­தி­ட­மி­ருந்து அவ­ரது குடும்­பத்தார் பெற்­றி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

1989 ஆம் ஆண்டு நில­விய அசா­தா­ரண சூழ்­நி­லையில், இப்பெண் திரு­மணம் முடித்து தொஹொ­மட பிர­தே­சத்தில் தனது கண­வ­னுடன் வசித்து வந்தநிலையில் இரண்டு மாதங்­களின் பின்னர் இவ­ரது கணவர் இனந்­தெ­ரி­யா­தோரால் சுட்­டுக்­கொல்ல ப்பட்­ட­த­னை­ய­டுத்து மறு­ப­டியும் தனது தாயின் வீட்­டுக்கு திரும்­பி­யுள்ளார்.

இது தொடர்பில் அப்பெண் தெரி­விக்­கையில், தான் வீட்­டுக்கு திரும்பி இரண்­டொரு நாளில் தனது கண­வனின் பெரி­யம்­மாவின் மகள் ஒருவர் நாவ­லப்­பிட்­டி­யி­லுள்ள அவ­ரது வீட்­டுக்கு அழைத்து சென்­ற­தா­கவும் அதன் பின்னர் ஆறு­த­லுக்­காக சுற்­றுலா செல்வோம் எனக் கூறி அவர் தன்னை கொழும்­புக்கு அழைத்து சென்று வீடு ஒன்றில் வேலைக்­க­மர்த்­தி­ய­தா­கவும் தெரி­வித்தார்.

பின்னர் குறித்த வீட்டார் தன்னை சுமார் 25 வரு­டங்­க­ளாக அடைத்­து­வைத்து வேலை வாங்­கி­ய­துடன் வீட்­டுக்கு செல்­வ­தற்கு கூட அனு­ம­தி­ம­றுத்து அடி­மைப்­ப­டுத்தி வைத்­தி­ருந்­த­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் தனது தந்தை மற்றும் கடற்­ப­டையில் பணி­யாற்றி வந்த தனது சகோ­த­ரனின் மரணம் குறித்து அவ்­வீட்டார் தனக்கு தெரி­யப்­ப­டுத்­திய போதிலும் தன்னை அம்­ம­ரண சடங்­கு­களில் கலந்து கொள்­வ­தற்கு கூட அனு­ம­தித்­தி­ருக்­க­வில்லை என்றார்.

இந்­நி­லையில் கடந்த 17 ஆம் திகதி கம்­பளை, கிரா­வுல்ல பிர­தே­சத்­தி­லுள்ள தனது வீட்­டுக்கு திரும்­பி­யி­ருந்­ததன் பின்னர் நாவ­லப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று நேற்­றைய தினம் அவர் வெளி­யே­றி­யி­ருந்த நிலையில், தெல்­கந்த – கொட்­டா­வைக்கு இடைப்­பட்ட பகு­தியில் அமைந்­துள்ள, தன்னை அடி­மைப்­ப­டுத்தி வைத்­தி­ருந்த வீட்டார் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.