முகத்தில் துணியை கட்டிக்கொண்டு மெரினாவிற்கு சென்ற நடிகர் விஜய்!!

256

 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் அலைகடலென திரண்டுள்ள மக்கள் கூட்டத்தில் நடிகர் விஜய் மறைமுகமாக கலந்துகொண்டுள்ளார்.

மெரினாவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம் என ஆரம்பம் முதலே மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற மௌன போராட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய், மெரினாவிற்கு சென்றுள்ளார்.

யாரும் தன்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக, தனது முகத்தில் துணியை கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக நின்றுள்ளார். ஆனால் இந்த புகைப்படங்களும் வெளியாகிவிட்டது.