வவுனியா மன்னார் வீதி விபத்தால் பதற்றம் : ஒருவர் காயம், ஒருவர் கைது!!(காணொளி இணைப்பு)

992

 
வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் இன்று (21.01.2017) மதியம் 2 மணியளவில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயனித்துகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றை முச்சக்கர வண்டி ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் கனரக வாகனத்தின் பிற்பகுதியில் மோதுண்டு எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கர வண்டி மோதியதில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள வாகன திருத்தும் நிலையத்தில் பணிபுரியும் ரூபன் என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளனதால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மது போதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டின் பெயரில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.