முதல்வரே வந்தாலும் நாளை ஜல்லிக்கட்டு நடக்காது : அதிரடி அறிவிப்பு!!

722

தமிழர்களின் தீவிர போராட்டத்தின் பலனாக நாளை காலை ஜல்லிக்கட்டு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வரே வந்தாலும் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அறிவித்துள்ளனர்.

நிரந்தர அனுமதி கிடைத்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அலங்காநல்லூர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டு பிரச்னையில் அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் வேண்டும், நிரந்தர சட்டம் பிறப்பிக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

எனினும், தமிழக அரசு நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில் தற்போது நடக்குமா என்ற நிலை உருவாகியுள்ளது.