மருத்துவமனையில் இருந்து போராட்டக்களத்திற்கு சென்ற ராகவா லோரன்ஸ்!!

545

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் 4 நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர். ஆனால் “போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும். அந்த மக்கள் முகங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். உணவு மற்றும் குடிநீர், பெண்களுக்காக கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றேன்” என்று கூறி மருத்துவ மனையில் இருந்து மீண்டும் மெரீனாவுக்கு ராகவா லோரன்ஸ் சென்றார்.