அரசியலில் குதிக்கும் நடிகர் ராகவா லோரன்ஸ்?

819

பிரபல திரைப்பட நடிகரான ராகவா லாரன்ஸ் தேவைப்பட்டால் அரசியலில் வரவும் தயார் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் உட்பட முக்கிய பிரபலங்கள் பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அதில் திரைப்பிலங்கள் பலரும் இருந்தனர்.

திரைப்பிரபலங்கள் பலர் கலந்திருந்தும், பெரிதும் பேசப்பட்ட நடிகர் என்றால் அவர் தான் ராகவா லாரான்ஸ்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் விதமாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார். அப்போது மக்கள் மனதில் ஒரு பெருமதிப்பு பெற்றார்.

இந்நிலையில் தேவைப்பட்டால் அரசியலுக்கு வரவும் தயாராக உள்ளேன். என்னுடன் இருக்கும் மாணவர்கள் இதுவரை எந்த கட்சியையும் சாராமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.

மெரினா போராட்டத்தின் போது என் மனைவியின் நகையை அடகுவைத்து போராட்டத்தில் பங்குபெற்றவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தேன். என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.