தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தாவுக்கும், தெலுங்குத் திரையுலகின் இளம் நாயகனான நாகசைதன்யாவுக்கும் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்ட இந்த விழாவில் காதல் ஜோடிகளின் பொருத்தம் பற்றி பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள்.
விழாவின் ஹைலைட்டாக சமந்தாவின் நிச்சயதார்த்தப் புடவை அமைந்துள்ளது. அந்தப் புடவையில் சமந்தா – நாகசைதன்யா இருவரது காதல் ஆரம்பமான ‘ஏ மாச சேசவே’ படத்திலிருந்து அவர்கள் இருவரும் நாகசைதன்யாவின் தம்பி அகில் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட குடும்பப் புகைப்படம் வரையிலான முக்கிய தருணங்கள் புடவையில் வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்தப் புடவையை மும்பையின் புகழ் பெற்ற டிசைனரான கேஷா பஜாஜ் வடிவமைத்துக் கொடுத்துள்ளாராம். வெள்ளை மற்றும் தங்க நிறத்திலான அந்தப் புடவைதான் தற்போது புடவைப் பிரியர்களின் பரபரப்புப் பேச்சாக உள்ளது.