சமந்தாவின் நிச்சயதார்த்த புடவையில் காதல் காவியம்!!

313

தமிழ், தெலுங்குத் திரை­யு­லகில் முன்­னணி நாய­கி­யாக இருக்கும் சமந்­தா­வுக்கும், தெலுங்குத் திரையுலகின் இளம் நாய­க­னான நாக­சை­தன்­யா­வுக்கும் நேற்று முன்­தி­னம் ஹைத­ரா­பாத்தில் நிச்சயதார்த்தம் நடை­பெற்­றது.

நெருங்­கிய உற­வி­னர்­களும், நண்­பர்­களும் மட்டும் கலந்து கொண்ட இந்த விழாவில் காதல் ஜோடிகளின் பொருத்தம் பற்றி பலரும் வாழ்த்துத் தெரி­வித்­துள்­ளார்கள்.

விழாவின் ஹைலைட்­டாக சமந்­தாவின் நிச்­ச­ய­தார்த்தப் புடவை அமைந்­துள்­ளது. அந்தப் புட­வையில் சமந்தா – நாக­சை­தன்யா இரு­வ­ரது காதல் ஆரம்­ப­மான ‘ஏ மாச சேசவே’ படத்­தி­லி­ருந்து அவர்கள் இரு­வரும் நாக­சை­தன்­யாவின் தம்பி அகில் நிச்­ச­ய­தார்த்­தத்தில் கலந்து கொண்ட போது எடுக்­கப்­பட்ட குடும்பப் புகைப்­படம் வரை­யி­லான முக்­கிய தரு­ணங்கள் புட­வையில் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தது அனை­வ­ரையும் கவர்ந்­துள்­ளது.

இந்தப் புட­வையை மும்­பையின் புகழ் பெற்ற டிசை­ன­ரான கேஷா பஜாஜ் வடி­வ­மைத்துக் கொடுத்துள்ளாராம். வெள்ளை மற்றும் தங்க நிறத்திலான அந்தப் புடவைதான் தற்போது புடவைப் பிரியர்களின் பரபரப்புப் பேச்சாக உள்ளது.